தமிழக செய்திகள்

தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பு? வருவாய்த்துறையினர் விசாரணை

தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்

தினத்தந்தி

மேட்டூர்:-

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ்கள் தயாரித்து வருவதாக மேட்டூர் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்துக்கு சென்றனர்.

பின்னர் இ-சேவை மையத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த கணினி மற்றும் ஹார்டுடிஸ்குகளை பறிமுதல் செய்தனர். அதனை மேட்டூரில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தகோரி மேட்டூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'போலி சான்றிதழ் தயாரிப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும்' என்றார்கள். இந்த சம்பவம் மேட்டூரில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து