தமிழக செய்திகள்

தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை; முதல் அமைச்சர் பழனிசாமி

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கலந்துகொண்டனர்.

இதில், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவை முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, கண்ணுக்கு தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கவும் அரசு வழிவகைகளை செய்துள்ளது.

ரேசன் கடைகள் வழியே, விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்டது. இந்த மே மாதத்திலும் வழங்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் பெற்று கொள்ளலாம். அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம்.

இதன்பின்னர் மீண்டும் ரூ.1,000 அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்கள் வழியேயும் மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம். இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்றனர் என அவர் கூறினார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்