தமிழக செய்திகள்

பெண்ணை தாக்கிய விவசாயி கைது

போடி அருகே பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

போடி அருகே உள்ள முந்தல் காலனியை சேர்ந்தவர் ஜெயா (வயது 62). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (50). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை ஜெயா தனது இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பையா, முந்தல் பகுதியை சேர்ந்த விஜயன் (29) ஆகியோர் ஜெயாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஜெயா குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது