தமிழக செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

காணை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டா.

காணை:-

காணை அருகே உள்ள காங்கேயனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 61), விவசாயி. சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்று அங்கு விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...