தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

தினத்தந்தி

வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இவர், தோட்டத்திற்கு வாழை இலை அறுக்க சென்றார்.தோட்டத்தில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த மின்கம்பியில் அவர் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் வினியோகத்தை நிறுத்தினர்.

இதற்கிடையே வைகை அணை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகனின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவர்களது 2 மகன்களும் பெற்றோரை இழந்து நிர்கதியாய் உள்ளனர். மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் வைகை அணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு