தமிழக செய்திகள்

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

தினத்தந்தி

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 44). விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று மகேந்திரன் தனது தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு முள்வேலி அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் மகேந்திரன் மின்கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கிவீசப்பட்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து