தமிழக செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி சாவு

ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியில் வசிப்பவர் வரதராஜ் (வயது 55). இவரது மனைவி ராதா (50). வரதராஜ் விவசாயம் செய்வதுடன், செங்கல் சூளையும் நடத்தி வந்தார். தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலையை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர் பாம்பை அடித்து கொன்றனர்.

அதன் பிறகு வரஜராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து