தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60), விவசாயி. இவர் நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதை தெரியாமல் வெங்கடேசன் மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் இறந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்