தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானா.

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த பெரியகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடு பையன் மகன் மூப்பன் (வயது 52). விவசாயி. இவர் நேற்று தனது வயலுக்கு சென்றார். அப்போது, அங்கு இருந்த செல்போன் டவருக்கு மின்சாரம் செல்லும் இரும்பு கம்பத்தை அவர் தொட்டதாக தெரிகிறது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை