தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலியாகினார்.

தினத்தந்தி

வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து