பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே தென்னந்தோப்பில் ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆடு மேய்த்ததில் தகராறு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 43). வௌநாட்டில் வேலை பார்த்து வந்த குணசேகரன், சமீபத்தில் சொந்த ஊர் திரும்பி விவசாய வேலைகளை கவனித்து வந்தார். ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சின்னப்பன். இவர் நேற்று காலை குணசேகரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த குணசேகரன் எனது தென்னந்தோப்பில் எப்படி ஆடு மேய்க்கலாம்? என சின்னப்பனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாககுணசேகரனுக்கும் சின்னப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
இவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த சின்னப்பன் மகன் முத்துச்செல்வன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து குணசேகரன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள முத்துசெல்வத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.