தமிழக செய்திகள்

விவசாயி பலி

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்.

தினத்தந்தி

சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (வயது 22). விவசாயி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் மயில் என்பவருடன் கோணப்பட்டியில் இருந்து நத்தமாடிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தமாடிபட்டி அருகே அவர்கள் வந்தபோது, பின்னால் ராகலாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (18) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கேசவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கேசவன், மயில், விஜயகுமார் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மயில், விஜயகுமார் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து