தமிழக செய்திகள்

விவசாயி தற்கொலை

கொடைரோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கொடைரோடு அருகே உள்ள அழகம்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி. இவரிடம், மதுபானம் குடிப்பதற்காக அழகேசன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த அழகேசன், கடந்த 29-ந்தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை