திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கிறது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு, குறைகளை மனுக்களாக கொடுத்து பயனடையலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.