தமிழக செய்திகள்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த விவசாய நலன் காக்கும் கூட்டம் வருகிற 22-06-2023 வியாழன் கிழமை காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் விவசாய நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு