தமிழக செய்திகள்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதில், கலந்து கொள்ளும் விவசாயிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேற்கண்ட தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்