தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் 18ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் வருகிற 18ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18.9.2025, வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 2025ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும்.

கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்