தமிழக செய்திகள்

தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் பச்சை பட்டாணி கிலோ ரூ.210-க்கு விற்பனை

தினத்தந்தி

தர்மபுரி:

தக்காளி, சின்னவெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பச்சை பட்டாணி கடந்த வாரம் 1 கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து சற்று அதிகரித்ததால் நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.192-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் உழவர் சந்தைக்கு பச்சை பட்டாணி வரத்து நேற்று குறைந்ததால் கிலோவிற்கு ரூ.18 அதிகரித்தது. இதன் காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ பச்சை பட்டாணி ரூ.210-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.220 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?