தமிழக செய்திகள்

விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பூமி வெப்பமடைவதை கட்டுப்படுத்த கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கையில் குடை பிடித்த படியும், தரையில் மாட்டு சாணத்தை தெளித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பூமி வெப்ப மடைவதை கட்டுப்படுத்த மாட்டுச் சாணம் தெளிப்பது அவசியம் ஆகிறது. அதனால் கிராமம் தோறும் சாணம் தெளிப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். இந்த பணிக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் விவசாயிகள் நாத்தாம்பூண்டி சிவா, ரமேஷ் பாண்டித்துரை, ஏழுமலை, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு