தமிழக செய்திகள்

கட்டிலில் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிலில் படுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கட்டிலில் பிணம்போல படுத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் காதர்உசேன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியாவுடன் இதர பொருட்களை வற்புறுத்தி விற்பதை நிறுத்த வேண்டும்.

மும்முனை மின்சாரம்

தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் இளங்கோவன், முன்னோடி விவசாயி கணேசன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பாபநாசம் வட்ட அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்ததன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு