தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலையில் விவசாயிகள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேளாண்மை இணை அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலராமன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பகல், இரவு பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் யூரியா உடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் உரக் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூரியா முறைகேட்டிற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அரிசி, காய்கறி, எலுமிச்சை பழங்கள் போன்றவற்றை வழங்கினர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்து வேளாண்மை இணை அலுவலகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்