தமிழக செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு

கிடாரம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டம் கிடாரம்பட்டி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்தநிலையில் இந்த நேரடி கொள்முதல் நிலையத்தை காட்டுப்பகுதியில் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது எனவும், ஏற்கனவே இயங்கி வந்த பொதுவான இடத்தில் இயங்க வேண்டும் என கோரி புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை