தமிழக செய்திகள்

வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வள்ளிமலை

தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பலத்தமழை

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகின்றது. மாவட்ட மற்றும் மாநில எல்லை பகுதியான திருவலம், வள்ளிமலை, பொன்னை ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது மாலையில் மழை பெய்ய தொடங்கினால் இரவு முழுவதும் கனமழை பெய்கிறது

வள்ளிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் வேர்க்கடலை பயிர் செய்து உள்ளனர். இவை இப்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

அழுகும் நிலை

ஆனால் இரவு முழுவதும் பெய்யும் பலத்த மழையால் வேர்க்கடலை பயிர் செய்துள்ள நிலத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வேர்க்கடலை செடிகள் பல இடங்களில் நீரில் மூழ்கி அழுகிப் போய் வருகின்றன.

விளைந்த பயிரை அறுவடை செய்ய முடியாமல் கஷ்டப்படுவதாகவும் மகசூல் பாதிப்பால் தங்னகளுக்கு டுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு