தமிழக செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி

ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஈரோட்டில் பணி வழங்காமல், பவானி, கோபி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைகண்டித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில், ஒப்பந்த பணியாளர்களுக்கு ஈரோட்டிலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு