தமிழக செய்திகள்

வாலிபர் உயிரிழப்பில் தந்தை-மகன் கைது - போலீசார் விசாரணை

வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தந்தை மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விசலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு சந்தோஷ்ராஜ் (22). பிருத்திவிராஜ் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று சந்தோஷ்ராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒரு லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தந்தை சவுந்தரராஜன் தனது மகன் பிருத்திவிராஜன் அங்கு சென்று சந்தோஷ்ராஜை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சந்தோஷ்ராஜை அவரது தந்தை சவுந்தரராஜன் மற்றும் பிருத்திவிராஜ் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சந்தோஷ்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரராஜன் மற்றும் பிருத்திவிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்