தமிழக செய்திகள்

கிணற்றில் பெண் பிணம்

தொப்பூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே செக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மேனகாகாந்தி (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே வீட்டுக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில்மேனகாகாந்தி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மேனகாகாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேனகாகாந்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அவர் எப்படிஇறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து