தமிழக செய்திகள்

கடற்கரையில் பெண் பிணம்

கன்னியாகுமரி கடற்கரையில் பெண் பிணம்

தினத்தந்தி

கன்னியாகுமரி கடற்கரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் நேற்று மாலையில் கடற்கரை சுனாமி நினைவு பூங்கா அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து