தமிழக செய்திகள்

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை..!

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நகை திருட்டு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் காந்திமதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. பெண் கைதி தற்கொலை குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து