தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜோதி என்கிற லட்சுமி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜோதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார். ஜோதி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து