தமிழக செய்திகள்

நிதி நிறுவன ஊழியர் சாவு

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை பெரிய தைக்கால் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 55). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந்தேதி மதியம் வீரமணி தனது வீட்டின் மாடியில் ஓய்வு எடுத்துவிட்டு கீழே இறங்கி உள்ளார். அப்போது மாடி படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை