தமிழக செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து

செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

சென்னை எழும்பூரிலிருந்து இன்று மதியம் 1.50 மணியளவில் மதுரை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது. தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு நோக்கி ரெயில் சென்று கொண்டிருந்தபோது, டி1 பெட்டியில் பயணி ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது, மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை எழுந்தது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு தீயணைப்பான் மூலம் கரும்புகை அணைக்கப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்