தமிழக செய்திகள்

தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு: காவல்துறை விளக்கம்

தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் ஒரு மாணவன் கல்லூரிக்கு நாட்டு வெடியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது நண்பர்கள் அந்த வெடியின் திரியை இழுத்தபோது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வெடி வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு என மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று அங்கு சோதனை செய்ததில், அது ஒரு மாணவரால் கொண்டுவரப்பட்ட பட்டாசு வெடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது சம்பந்தமாக விசாரணையில் உள்ள நிலையில், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து