தமிழக செய்திகள்

விருத்தாசலத்தில் பட்டதாரி ஆசிரியர் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

விருத்தாசலத்தில் பட்டதாரி ஆசிரியர் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

விருத்தாசலம், அக்.12-

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட சாவடிக்குப்பம் பகுதியில் வசிக்கும் அருள்ஜோதி என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார், அருள்ஜோதி வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் மாடியில் சோதனை செய்ததில், அங்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அருள்ஜோதியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விருத்தாசலம் அருகே தொரவளூர் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், அனுமதி பெறாமல் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், அருள்ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் வீட்டில் பதுக்கி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்