தமிழக செய்திகள்

அரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்

கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கரடிக்குளம் கிராமத்தில் நீர் வடிகாலுக்காக சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் போடப்பட்டிருந்தது. இந்த குழாய்க்குள் நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் பிறகு பெய்த மழையால், குழாய்க்குள் தண்ணீர் சென்ற நிலையில், நாய்க்குட்டிகள் குழாய்க்குள் சிக்கிக் கொண்டன.

குட்டி நாய்களின் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், அவற்றை மீட்க வழி தெரியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த குட்டிகளை அதன் தாய் நாயுடன் சேர்த்தனர். நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதற்காக தீயணைப்புத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து