சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கே நேரடியாக சென்று தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.