தமிழக செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவது தள்ளிப்போய்க் கொண்டு இருக்கின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதற்கு கடந்த 11-ந்தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்படி, 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இன்று தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் உள்ளவற்றை ஒவ்வொரு பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும் என்றும் அரசு கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை