தமிழக செய்திகள்

திருப்பூரில் முதல் முறையாக. ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரசீது.. மதுபிரியர்களின் கருத்து

மதுபானக் கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், பாட்டிலுக்கு முப்பது ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார் எழுந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

மேலும், உரிய ஆதாரங்களுடன் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்படும் என விவசாய சங்கத்தினர் கூறினர். இதையடுத்து, இடுவாயில் வியாழக்கிழமை முதல், அந்த மதுபானக் கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கடை தொடங்கிய நாளில் இருந்து ரசீது போட்டு மது பாட்டில் விற்பனை செய்வது இதுவே முதல் முறை என அப்பகுதி மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே நடைமுறையை அனைத்து மதுபானக் கடைகளிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு