திசையன்விளை:
உவரி அருகே உள்ள பெரியதாழை ஜார்ஜ் மிக்கேல் நகரை சேர்ந்தவர் விலிங்ஸ்டன் (வயது 57). மீனவரான இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, விலிங்ஸ்டனை கைது செய்து சிறையில் அடைத்தார்.