தமிழக செய்திகள்

சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கெண்டாட்டதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகெண்டு தேசிய கெடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கேட்டை கெத்தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை கடற்கரை பகுதியில் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி மீன்பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில், "பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்