தமிழக செய்திகள்

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தினத்தந்தி

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த 31-ந்தேதி சீசன் தொடங்கியது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 10 நாட்களாக அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. எனினும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்து ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் போது மண், குச்சிகள் அடித்துவரப்பட்டது.

அப்போது புதிதாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு அலாரம் ஒலித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து