தமிழக செய்திகள்

வெள்ள தடுப்பு பணிகள்; தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தினத்தந்தி

நெல்லை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு சற்று கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"மழை வெள்ளத்தை எதிர்கொள்ள 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் கூறினார். ஆனால் புயலும், பெருவெள்ளமும் வரும் என்று தெரிந்திருந்தும் தமிழக அரசு சற்று கவனக்குறைவாகவே செயல்பட்டுள்ளது.

இதை அரசியலுக்காக சொல்லவில்லை. வெள்ளம், புயல் வரும்போது அதை ஒரு தனிமனிதரோ, அல்லது அரசு இயந்திரமோ உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம்."

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்