தமிழக செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

​குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அங்குச் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.

​வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும், உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து

பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும்.

​அவசர உதவி எண்கள் (Emergency Contacts):

​கட்டணமில்லா அவசர எண் (Toll-free): 1234

​ஹாட்லைன் (Hotline): 1144

​சுற்றுலா காவல்துறை (Tourist Police): 9851289445”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.