கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

"ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்" - விக்கிரமராஜா குற்றச்சாட்டு

உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் அத்துமீறுவதாக புகார்கள் வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

தினத்தந்தி

நீலகிரி,

உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கடைகளில் புகுந்து அத்துமீறுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய விக்ரமராஜா, வணிக நிறுவணங்களில் ஆய்வு என்ற பெயரில் கடைகளில் புகுந்து உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் அத்துமீறுவதாக புகார்கள் வருவதாக தெரிவித்தார். இது சம்மந்தமாக துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்த அவர், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் பிளாஸ்டிக ஒழிப்பிற்க்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்.

சமீப நாட்களாக தமிழகத்தில் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு