தமிழக செய்திகள்

9, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகைதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

9, 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தினத்தந்தி

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படித்து வரும் 30 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை (YASASVI) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தேசிய தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று மத்தியஅரசு பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே தகுதியான மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.inமற்றும்http://socialjustice.gov.இந்த ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறி உள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்