சென்னை,
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. அமைத்த குழுவிலும் சிவசங்கர் இடம்பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் சூழலில், கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற சிவசங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். இதன்படி சிவசங்கருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது சிவசங்கர் மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார். அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.