தமிழக செய்திகள்

முன்னாள் ஐ.ஐ.டி. பேராசிரியர் சைக்கிள் பயணம்

முன்னாள் ஐ.ஐ.டி. பேராசிரியர் சைக்கிள் பயணம் மேற்காண்டார்.

புதுடெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசிரியர் கிரண் சேத் (வயது73), பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவர் பாரம்பரிய இசை கலாசாரத்தை இளைஞர்களிடையே மேம்படுத்தும் வகையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று விருதுநகர் வந்த அவர் கூறியதாவது:- 3 முக்கிய காரணங்களுக்காக இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். முதலாவதாக நாட்டின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் குறித்து ஆர்வத்தை இளைஞர்களிடையே அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம் சிறந்தது. அனைவரும் சைக்கிள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கேடும் இல்லை. மூன்றாவதாக காந்தியின் எளிய வாழ்க்கை முறை சிந்தனைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பயணம் மேற்கொண்டு கல்லூரி மாணவர்களையும், இளம் தலைமுறையினரையும் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். இதுவரை 14 மாநிலங்களை கடந்து தமிழகம் வந்துள்ளேன். பரதநாட்டியம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் புரிதல் இல்லை. தமிழகம் கலாசாரம் பண்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலமாக கருதப்படுகிறது. இளம் தலைமுறை அதனை பாதுகாப்பதுடன் பின்பற்றவும் வேண்டும் என்றார். கடந்த ஆகஸ்டு 11-ல் ஸ்ரீநகரில் இந்த யாத்திரையை தொடங்கியவர் பிப்ரவரி 19-ந் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு