சென்னை,
அதிமுக முன்னாள் எம்.பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். அதிமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை (2009 மற்றும் 2014) திருவள்ளூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-இல் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக செயல்பட்ட வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக நம்பிக்கை இழந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டியும் வேணுகோபால் விலகியுள்ளார். அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.