தமிழக செய்திகள்

புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

சுரண்டை அருகே புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

சுரண்டை:

சுரண்டை அருகே கருவந்தா கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கருவந்தா கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பழனி என்ற பால்துரை, வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், பொறியாளர் அணி மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் வெள்ளத்துரை, பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிலிப் ராஜா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கணேசன், குத்தாலிங்கம், செல்வம் உட்பட தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு