தமிழக செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்.

தினத்தந்தி

ராமநாதபுரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் 4 மீனவர்களையும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்