தமிழக செய்திகள்

3 தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை

3 தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகைக்கான அரசாணை மற்றும் திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் கற்பகம் இலவச பஸ் பயண சலுகை அரசாணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்களில் 2019-20-ம் ஆண்டிற்கு அங்கமுத்துவுக்கும், 2020-21-ம் ஆண்டிற்கு யசோதா, தேவராசு ஆகியோருக்கும் வழங்கினார். மேலும் அவர் 2022-23-ம் ஆண்டில் திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவி ஹன்சிகாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் சித்ரா உடனிருந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை